Home> Lifestyle
Advertisement

உடலுறவின் போது நாம் மேற்கொள்ளும் சில விஷயங்களே LGBT-க்கு காரணம்..!

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அவர்கள் மேற்கொள்ளும் சில விஷயங்களே ஓரின சேர்க்கைக்கு காரணம் என பாரிதியார் பகீர் விளக்கம்!!  

உடலுறவின் போது நாம் மேற்கொள்ளும் சில விஷயங்களே LGBT-க்கு காரணம்..!

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அவர்கள் மேற்கொள்ளும் சில விஷயங்களே ஓரின சேர்க்கைக்கு காரணம் என பாரிதியார் பகீர் விளக்கம்!!  

சிப்ரஸ் நாட்டில் உள்ள மார்ப்போ நகரில் சைப்ரஸ் தேவாலயத்தை சேர்ந்த பாதியார் நியோபிடோஸ் மசோராஸ், சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில் பேசிய ஓரினசேர்க்கை குறித்த கருத்து ஓன்று இனையத்தில் விரலாக பரவி வருகிறது. 

இந்த கருத்து சைப்ரியாட் LGBT+ group ACCEPT என்ற முகநூல் பக்கத்தில் பாரிதியாரின்  "லெஸ்பியன் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?" ஆதாரமற்ற கூற்றுக்களுடன் யூ-டியூப் இணைப்பைப் பகிர்ந்துள்ளது. கடந்த வாரம் சிப்ரஸ்சில் உள்ள அகாகி என்ற பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பேசும் போது; "உலகில் LGBT-யினர் உருவானதற்கு நாம் தான் காரணம். ஆணும் பெண்ணும் உடலுறவு செய்யும் போது சில விநோத முயற்சிகளால் தான் அவர்களின் எண்ணங்கள் திசை மாறி ஆணும் ஆணும் உடலுறுவு கொள்ளும் யோசனை வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். 

மேலும், பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களுடன் கணவர்கள் உடலுறவு கொள்ள நினைக்கிறார்கள். இதனால், அவர்கள் உடலுறவு சமயத்தில் வழக்கமாக இல்லாமல் ஆசன வாய் உடலுறவை வைத்துக்கொள்வது ஆணிற்கு சக ஆணிடம் உறவு கொள்ளும் எண்ணம் எழுந்துள்ளது" என கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலர் பல்வேறு விதமான எதிர் கருத்துக்களும், கண்டனங்களும் கிளம்பியுள்ளது. 

சிப்ரஸ் நாட்டை பொருத்தவரை இன்று வரை ஒரே பாலின சேர்க்கை அனுமதிக்கப்படவில்லை. அது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Read More