Home> Lifestyle
Advertisement

மத்திய அரசு தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்!

மத்திய அரசு தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!

மத்திய அரசு தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்!

மத்திய அரசு தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!

ஊழியர் தேர்வு ஆணையம் (SSC) மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆகியவற்றால் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு பரீட்சைகளில் கேள்வித்தாள் பொதுவாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. 

சில பரீட்சைகளில், கேள்வித் தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இருப்பினும், UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் பரீட்சைகளில், தேர்வாளர்களுக்கு, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள எந்தவொரு மொழியிலும் தகுதி மொழியியல் தாள்கள், தாள்-ஏ மற்றும் தாள்-பி ஆகியவற்றைத் தவிர்த்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வாய்ப்பளித்துள்ளது. 

மேலும், எஸ்.சி.சி மூலம் நடத்தப்படும் மல்டி டாக்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்ப பிரிவு அல்லாதவர்) ஆட்சேர்ப்புக்கான தேர்வில், போட்டியாளர்கள் ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எந்த மொழியிலும் பதில் அளிப்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் தேர்வு ஆணையமானது (SSC) அனைத்து இந்திய அடிப்படையிலும் அதன் ஆட்சேர்ப்புக்களை நடத்துகின்றது.

கடந்த மூன்று வருடங்களில், SSC ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகள் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!

2014-15: 58066
2015-16: 25138
2016-17: 68880

Read More