Home> Lifestyle
Advertisement

ஊழியர்களுக்கு அட்டகாச செய்தி: EPF-ல் வரக்கூடும் 66% அதிகரிப்பு, கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்

EPF News: புதிய ஊதியக் குறியீடு எப்போது அமல்படுத்தப்பட்டாலும், அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். 

ஊழியர்களுக்கு அட்டகாச செய்தி: EPF-ல் வரக்கூடும் 66% அதிகரிப்பு, கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்

புதிய ஊதியக் குறியீடு / வருங்கால வைப்பு நிதி: புதிய ஊதியக் குறியீடு விதிகள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. ஊடகங்களில், இது குறித்து அதிகம் எழுதப்பட்டும், கூறப்பட்டும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இதைப் பற்றிய மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், புதிய ஊதியக் குறியீடு எப்போது அமல்படுத்தப்பட்டாலும், அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். 

புதிய ஊதியக் குறியீட்டின் மூலம் நிவாரணம் கிடைக்கும்

புதிய ஊதியக் குறியீட்டில், ஊழியரின் அடிப்படை சம்பளம் அவரது சிடிசியின் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது ஊழியரின் இபிஎஃப் (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) தொகையையும் பாதிக்கும். பணியாளரும் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப்-ல் பங்களிப்பார்கள்.

இபிஎஃப்ஓ விதி என்ன சொல்கிறது?

இபிஎஃப்ஓ விதிகளின்படி, நீங்கள் முழு பிஎஃப் தொகையையும் எடுத்தால், அதற்கு வரி விதிக்கப்படாது. எனவே, புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, அடிப்படைச் சம்பளம் 50%க்கு மேல் இருக்கும் போது, ​​அதில் பிஎப் பங்களிப்புக் கழிக்கப்படும்போது, ​​பிஎஃப் நிதியும் அதிகமாக இருக்கும். அதாவது, ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​முன்பை விட அதிகமான பிஎஃப் இருப்பு இருக்கும். ஒரு உதாரணத்துடன் அதன் கணக்கீட்டைப் புரிந்துகொள்வோம்.

மேலும் படிக்க | EPFO அளிக்கும் அசத்தல் வாய்ப்பு: இதில் பதிவு செய்தால் லாபம் காணலாம்

ஒரு ஊழியரின் வயது 35 வயது என்றும், அவரது மாத சம்பளம் மாதம் ரூ.60,000 என்றும் வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், அவரது வருடாந்திர அதிகரிப்பு 10% எனக் கருதப்பட்டால், தற்போதைய பிஎஃப்-இன் வட்டி விகிதமான 8.5% -ன் படி, ஓய்வு பெறும் வயதில், அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மொத்த பி.எஃப் இருப்பு ரூ.1,16,23,849 ஆக இருக்கும்.

கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்

அதே நேரத்தில், தற்போதுள்ள இபிஎஃப் பங்களிப்புடன் இந்த பிஎஃப் இருப்பை ஒப்பிடும் போது, ​​ஓய்வுக்குப் பிறகு பிஎஃப்  இருப்புத் தொகை ரூ.69,74,309 ஆக இருக்கும். அதாவது, புதிய ஊதிய விதியின் மூலம், பழைய நிதியை விட பிஎஃப் இருப்பு குறைந்தது 66% அதிகமாக இருக்கும். அதாவது, புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக ஓய்வு பெறலாம். 

கிராஜுவிட்டியும் மாறும்

புதிய ஊதியக் குறியீட்டின்படி, ஊழியர்களின் கிராஜுவிட்டியிலும் மாற்றம் இருக்கும். கிராஜுவிட்டியின் கணக்கீடு இப்போது பெரிய தொகைக்கான அடிப்படையில் செய்யப்படும். இதில் அடிப்படை ஊதியத்துடன் பயணப்படி, சிறப்பு கொடுப்பனவு போன்ற பிற கொடுப்பனவுகளும் அடங்கும். இவை அனைத்தும் நிறுவனத்தின் கிராஜுவிட்டி கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும் படிக்க | PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More