Home> Lifestyle
Advertisement

PM Kisan நிதியுதவி; 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு

PM Kisan 11th Installment: PM Kisan Samman Nidhi Yojana பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். e-KYC இல்லாமல் இந்தத் தவணையின் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படாது. 

PM Kisan நிதியுதவி; 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் 12 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 11வது தவணை தொகை ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்பட உள்ளது. 

11வது தவணைக்கு இ-கேஒய்சி செய்ய வேண்டியது கட்டாயம்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை 2000-2000 என்ற மூன்று தவணைகளில் அனுப்பப்படுகிறது. ஐந்து மாநிலங்களுக்கு தேர்தலுக்கு முன் 10வது தவணையை அரசு அனுப்பியிருந்தது. ஆனால் 11வது தவணைக்கு இ-கேஒய்சி செய்ய வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-கேஒய்சி செய்வதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.

மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 

மத்திய அரசின் இந்த திட்டத்தில் மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாகும். சில மாநில அரசுகள் 11வது தவணைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. போர்ட்டலில் உள்ள நிலையைச் சரிபார்த்தபோது, ​​மாநிலத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் தவணைக்கான ஒப்புதல் மாநில அரசிடமிருந்து வரவில்லை என்பது அற்தமாகும்.

இந்தநிலையில், விவசாய பயனாளிகள் இ-கேஒய்சி செயல்முறையை மார்ச் 31, 2022 க்குள் முடிக்காவிட்டால், அவர்களால் 11வது தவணையைப் பெற முடியாது. எனவே விவசாயிகள் விரைவாக இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.

இ-கேஒய்சி எவ்வாறு செய்வது
* முதலில், விவசாயிகள் பிஎம்-கிசான் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

* பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘இ-கேஒய்சி’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

* ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு ‘ஓடிபி பெறவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

* இப்போது, ​ஓடிபி ஐ உள்ளிட வேண்டும். இப்போது பிஎம்-கிசான் இ-கேஒய்சி சமர்ப்பிக்கப்பட்டு விடும்.

இந்த செயல்முறை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More