Home> Lifestyle
Advertisement

Bank Locker: லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய தகவலை அளித்தது ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில், வங்கி, லாக்கரை வாடகைக்கு எடுப்பவருக்கு கடிதம் மூலம் அறிவிப்பை வழங்கும்.

Bank Locker: லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய தகவலை அளித்தது ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: வங்கி லாக்கர் என்பது மக்களுக்கு பல வகைகளில் பயன்படும் ஒரு வசதியாகும். மக்கள் தங்களுடைய நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் வைப்பதால் இவை பாதுகாப்பாக இருக்கின்றன. வங்கிகளை ஒப்பிடுகையில், நம் வீடுகளில் இவை திருடு போவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

ஆனால் இப்போது உங்களது இந்த சிறப்பு வசதியில் பிரச்சனைகள் வரக்கூடும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, நீங்கள் நீண்ட நேரம் லாக்கரைத் திறந்த்து பயன்படுத்தவில்லை என்றால், வங்கிகள் உங்கள் லாக்கரை உடைத்து உள் இருக்கும் பொருட்களை செக் செய்யக்கூடும். 

வங்கிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பாதுகாப்பான வைப்பு லாக்கர்கள் (Safe Deposit Locker) தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில், நீண்ட நாட்களாக லாக்கர் திறக்கப்படாமல் இருந்தால், வங்கிகள் லாக்கரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகையை முறையாக செலுத்தி வந்தாலும் இந்த விதி பொருந்தும்.

ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்துள்ளது

வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோர் புகார்களின் தன்மை மற்றும் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks’ Association) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, பாதுகாப்பு வைப்பு லாக்கர்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை சமீபத்தில் திருத்தியுள்ளது. செயல்படாத வங்கி லாக்கர்கள் குறித்த புதிய விதிமுறைகளையும் அளித்துள்ளது.

ALSO READ | SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி; 5 மணி நேரத்திற்கு எதுவும் செய்ய முடியாது 

வங்கி லாக்கரை உடைக்கக்கூடும்

திருத்தப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில், லாக்கரை (Bank Locker) அகற்றுவதற்கும், லாக்கரின் உள்ளடக்கங்களை அதன் நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றுவதற்கும், வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கும் வங்கிக்கு சுதந்திரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கர் 7 ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்து, தொடர்ந்து வாடகை மட்டும் செலுத்தப்பட்டாலும், லாக்கரின் சொந்தக்காரரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், இந்த விதி பொருந்தும். ஆனால் அதே நேரத்தில் பொது நலனைப் பாதுகாக்கும் வகையில், எந்தவொரு லாக்கரையும் உடைக்கும் முன் அதற்கான விதிக்கப்பட்ட விதிகள் பின்பற்ற வேண்டும் என்ற வழிமுறைகளையும் மத்திய வங்கி வெளியிட்டது.

லாக்கர் சொந்தக்காரர் எச்சரிக்கப்படுவார் 

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில், வங்கி லாக்கரை வாடகைக்கு எடுப்பவருக்கு கடிதம் மூலம் அறிவிப்பை வழங்கும் என்றும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் ஃபோன் எண்ணுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை அனுப்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடிதம் டெலிவரி செய்யப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது லாக்கர் வாடகைக்கு எடுத்தவர் கண்டுபிடிக்கப்படாவிட்டாலோ, வங்கி லாக்கர் வாடகைதாரருக்கோ அல்லது லாக்கரின் உள்ளடக்கத்தில் ஆர்வமுள்ள வேறு ஒருவருக்கோ பதிலளிக்க நியாயமான கால அவகாசம் அளித்து, பொது அறிவிப்புகளை 2 நாளிதழ்களில் (ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று உள்ளூர் மொழியிலும்) நோட்டீஸை வெளியிடும்.

லாக்கர் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்

வங்கியின் (Banks) அதிகாரி மற்றும் இரண்டு சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் லாக்கரை திறக்க வேண்டும் என்றும், முழு செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மேலும் கூறுகின்றன. லாக்கரைத் திறந்த பிறகு, வாடிக்கையாளரால் உரிமை கோரப்படும் வரை, தீயினால் பாதிக்கப்படாத பாதுகாப்பான உறைக்குள் வைத்து சீல் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு! இந்த பெரிய முடிவு எடுக்கபடும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More