Home> Lifestyle
Advertisement

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிற்று வலி தொடங்கி அல்சர் வரை பல அபாயங்களை ஏற்படுத்துகிறது.  

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

Spicy Foods Side Effects: இந்தியாவில் பலரும் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்திய உணவில் மசாலாப் பொருட்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக தென் தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் உணவில் அதிகப்படியான காரணம் மற்றும் மசாலா சேர்க்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து காரமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது கடுமையான விஷத்தை ஏற்படுத்தும். வயிற்று வலி தொடங்கி அல்சர் வரை பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

மேலும் படிக்க | வயசானாலும் மூளை சூப்பராக செயல்பட... தேவையான உணவுகளும் - பயிற்சிகளும்!

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற தனிமம் நமக்கு காரமாக உணர்வை தருகிறது. இந்த தனிமம் மிளகாயில் அதிக அளவு இருப்பதால், மிளகாய் அதிக காரமாக உள்ளது. அதிக அளவு கேப்சைசின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒருசிலருக்கு காரமான உணவை சாப்பிடுவதால் உடலில் நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், உடலில் என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்.

காரமான உணவு சாப்பிட்டால்

காரமான உணவை அடிக்கடி சாப்பிட்டால் மூச்சு திணறல், அதிக காய்ச்சல், மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அதிகாரமான உணவை சாப்பிட்டால் செரிமான அமைப்பை எரிச்சலூட்டும். இது வயிற்று எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். இந்த பிரச்சினைகள் கொஞ்சம் நேரத்தில் சரி ஆகிவிடம் என்றாலும் சில நேரங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

  • அதிக காரமான உணவுகளை சாப்பிட்டால் வாயில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.
  • காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது உடல் வியர்வையை அதிகரிக்க செய்யும்.
  • அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது வாயில் கொப்புளங்கள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும்.
  • காரமான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • காரமான உணவுகளை சாப்பிட்டால் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
  • காரமான உணவுகளை சாப்பிடுவது வாந்தி மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

காரமான உணவுகளை யார் யார் தவிர்க்க வேண்டும்?

காரமான உணவுகளை குழந்தைகள், வயதானவர்கள், வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேப்சைசினுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்களுக்கு கடுமையான விஷம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. உங்களுக்கு காரமான உணவுகளை சாப்பிட விருப்பம் என்றால் அதனுடன் கூடுதலாக ஏதாவது உணவை எடுத்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காரமான உணவுடன் தயிர் அல்லது பால் சேர்த்து சாப்பிடலாம். பால் அல்லது தயிர் உடலில் காரத்தின் விளைவை குறைக்கும். சாப்பிட்ட பிறகு வயிற்று பகுதியில் எரியும் உணர்வு இருந்தால் கூலிங்கான நீரை குடியுங்கள். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Health Risks Of Cold Water: ஜிலு ஜிலு ஐஸ் வாட்டரில் இருக்கும் அடக்கமுடியா பிரச்சனைகள்! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More