Home> India
Advertisement

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம்; உச்சகட்ட பாதுகாப்பில் உபி...!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம்; உச்சகட்ட பாதுகாப்பில் உபி...!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிப்பு ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

தகவல்களின்படி, உத்திரபிரதேச முதல்வர் சனிக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட / வீச்சு சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடி, மாநிலத்தில் போதுமான மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு மறுஆய்வு குறித்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 9-ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, முதல்வர் பாதுகாப்பு மறுஆய்வு செய்துள்ளதாக உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் டிசம்பர் 15 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகுறிப்பில் மேலும் குறிப்பிடுகையில்., "வழக்கமான கால் ரோந்து, உத்திரபிரதேச -112 ரோந்து மற்றும் அமைதி குழுக்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் வழக்கமான உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் வலியுறுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத இடங்கள், வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள், ATM-கள் மற்றும் வங்கிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் CCTV கேமராக்கள் வைத்திருப்பது குறித்தும், இடத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதையும் யோகி வலியுறுத்தியுள்ளார்.

Read More