Home> India
Advertisement

டெல்லி: நீதிமன்றத்திற்குள் பெண் பாலியல் பலாத்காரம்....நடந்தது என்ன....?

போலீஸ் கூற்றுப்படி, அந்த பெண் திங்கள்கிழமை பிற்பகல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து நீதிமன்ற ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறினார்.

டெல்லி: நீதிமன்றத்திற்குள் பெண் பாலியல் பலாத்காரம்....நடந்தது என்ன....?

புதுடெல்லி: அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 38 வயதான பெண் ஒருவர் தேசிய தலைநகரில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் அறைக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திங்கள்கிழமை (ஜூன் 22) நடந்தது.

போலீஸ் கூற்றுப்படி, அந்த பெண் திங்கள்கிழமை பிற்பகல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து நீதிமன்ற ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறினார். அவரது அறிக்கையின் அடிப்படையில், இது தொடர்பாக பிரிவு 376 ன் கீழ் போலீசார் புகார் அளித்து, அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அந்த இடத்திலேயே தடுத்து வைத்தனர்.

 

READ | தனது ஊனமுற்ற மக்களை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூர தந்தை..!

 

நீதிமன்ற ஊழியராக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர், ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் ஒரு அறைக்குள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவரின் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.

Read More