Home> India
Advertisement

மருத்துவமனையில் கணவரை தரையில் இழுத்தே சென்ற மனைவி

சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர மறுத்ததால் 40-வயது பெண் தனது கணவரை மருத்துவமனை முதல் மாடிவரை இழுத்தே சென்றார். 

மருத்துவமனையில் கணவரை தரையில் இழுத்தே சென்ற மனைவி

அனந்தபூர்: சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு ஸ்ட்ரெச்சர் தர மறுத்ததால் 40-வயது பெண் தனது கணவரை மருத்துவமனை முதல் மாடிவரை இழுத்தே சென்றார். 

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச்சாரி. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இவரை அங்குள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீனிவாச்சாரி என்ற நோயாளி தனது மனைவியுடன் சிகிச்சைக்காக சென்றார்.

ஸ்ரீனிவாச்சாரி நடக்க முடியாத நிலையில் அவரை முதல் மாடிக்கு அழைத்துச் செல்ல நிர்வாகத்திடம் மனைவி ஸ்ட்ரெச்சர் படுக்கை கேட்டுள்ளார். மருத்துவ நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் தர மறுத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது கணவரை முதல் மாடிவரை இழுத்தே சென்றுள்ளார். அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரை முதல் தளத்துக்கு இழுத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தார் ஸ்ரீவாணி.

Read More