Home> India
Advertisement

குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி

குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆதரவாக 99 வாக்கும், எதிராக 124 வாக்கும் பதிவாகின.

குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி

புது டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. அதாவது குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது சிவசேனா கட்சி வெளிநடப்பு செய்தது.

Read More