Home> India
Advertisement

Viral Video: மணப்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசத்தில் மணப்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்த இரண்டு இளைஞர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

Viral Video: மணப்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்த இளைஞர்கள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகே உள்ள பர்ரா என்ற இடத்தில் கடந்த புதன் கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இரண்டு இளைஞர்கள் மணப்பெண்ணுடன் மிகவும் நெருக்காம அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார், அந்த இரண்டு இளைஞர்களையும் அடித்து உதைத்தனர். அதன் பின் உறவினர்கள் மணமக்களை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More