Home> India
Advertisement

சர்வதேச கலா மேளாவை துவங்கி வைக்கின்றார் துணை குடியரசு தலைவர்!

புதுடெல்லியில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச கலா மேளாவை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இன்று துவங்கிவைக்கின்றார்.

சர்வதேச கலா மேளாவை துவங்கி வைக்கின்றார் துணை குடியரசு தலைவர்!

புதுடெல்லியில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச கலா மேளாவை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இன்று துவங்கிவைக்கின்றார்.

கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா இந்நிகழ்வில் பங்கேற்கின்றார்.

கலை மற்றும் கலாசார மேம்பாட்டை பிரதான நோக்கமாக கொண்டு இயங்கி வரும் லலித் கலா அகெடமி இந்து நிகழ்ச்சியை ஒருங்கினைக்கின்றது. இந்த கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஆனது இன்று பிப்.,4 முதல் பிப்.,18 வரை நடைபெறுகிறது. 

டெல்லி இந்திரா காந்தி மையத்தில் (IGNCA) நடைப்பெறும் இந்நிகழ்ச்சி தினமும் பிற்பகல் 12 மணியளவில் துவங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலை மேளாவில் பல்வேறு கலைக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விஷுவல் ஆர்ட் திரைப்பட விழா, மட்பாண்ட / பட்டாச்சிரா / பேப்பர் மேஹெக் பட்டறைகள், இசை நிகழ்ச்சிகள், டான்ஸ் டிராமாஸ், கலைஞர் குப் ஷப் பாயிண்ட், நக்கத் நாதக், மற்றும் நேரடி செயல்திறன் போன்றவை இடம்பெறுகின்றன. 

சர்வதேச அளவிலான இந்த கலா மேளாவை லலித் அகாடமி பெரிய அளவிலான திட்டத்தில் முதன்முறையாக திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடெங்கிலும் இருந்து 800 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பல தூதரகங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் இந்த விழாவை ஒரு சர்வதேச வெற்றியாக மாற்றுவதில் பங்கு பெறுகின்றன. 

சீனா, வெனிசுலா, பெரு, போர்ச்சுகல், இலங்கை, போலந்து, துனிசியா, மெக்ஸிக்கோ, பங்களாதேஷ், டிரினிடாட், டொபகோ, பிஜி, பிரான்ஸ், பப்புவா நியூ கினியா, செசியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் ஆகியவை மேலவில் பங்குபெறும் நாடுகளில் சில. 
இந்த விழாவில் இந்திய பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதித்துவங்களுக்கும் உட்பட சுமார் 325 ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read More