Home> India
Advertisement

திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் மீது Acid வீச்சு!

உத்திர பிரதேசத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் மீது வாலிபர் ஒருவர் அமிலம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் மீது Acid வீச்சு!

முஷாபர்நகர்: உத்திர பிரதேசத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் மீது வாலிபர் ஒருவர் அமிலம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

உத்திரபிரதேச மாநிலம் பிரமப்பூரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த சாகிர் அலி என்பவர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ள இளம்பெண் தன் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

எனவே சாகிர் அலியை கண்டித்த இளம்பெண்ணின் பெற்றோர், மீண்டும் தொல்லை செய்யும் பட்சத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளானர். இதனால் ஆத்திரம் அடைந்த சாகிர் அலி கல்லூரி சென்று வீடி திரும்பிய இளம்பெண்ணின் மீது அமிலத்தை வீசியுள்ளார். 

பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக முஷாபர்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாகிர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட சாகிர் அலியின் மீது பாலியல் தூண்டல், அமிலம் வீசியதற்காக குற்றவியல் பிரிவில் வழக்கு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More