Home> India
Advertisement

பெண் பயணியை பார்த்து சுயஇன்பம் கொண்ட உபர் டிரைவர் கைது

பெண் பயணியை பார்த்து சுயஇன்பம் கொண்ட உபர் டிரைவர் கைது

ஐதராபாத்தில் பெண் பயணி ஒருவர் முன்பு சுய இன்பம் கொண்ட உபர் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் வசித்து வருபவர் உமா ஷர்மா டெல்லியை சேர்ந்தவர். அண்மையில் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார்.

கடந்த 19-ம் தேதி அதிகாலை அவர் உபர் கார் மூலம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆள் நடமாட்டமே இல்லாத ரோட்டை அடைந்ததும் டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைத்துவிட்டு உமாவை கண்ணாடி வழியாக பார்த்துள்ளார்.
பின்னர் அவர் உமாவை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதை பார்த்து உமா அலறிய பிறகே அவர் காரை நிறுத்தியுள்ளார். 

அனால் இறுதியாக உமாவை அந்த டிரைவர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டார். டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் உமா போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்துள்ளனர்.

Read More