Home> India
Advertisement

திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தில் 2 பேர் பலி; 3 பேர் காயம்

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தில் 2 பேர் பலி; 3 பேர் காயம்

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

வியாழக்கிழமையான காலை மார்கரம்பூர் கிராமத்தில் உள்ள நாராயங்கர் தெஹ்ஸில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது கிடைத்த அறிக்கைகள் படி, மற்றொரு நபர் மிகவும் மோசமான நிலையில் உள்ளார்.

 

இன்று (வியாழக்கிழமை) நாராயங்கர் தெஹ்ஸில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக காலையில் கட்சித் தொண்டர்கள் அலுவலகத்தில் நுழைவதற்கு கதவுகளைத் திறந்த போது இந்த வெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழு, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Read More