Home> India
Advertisement

ZEE NEWS குண்டு வைத்து தகர்ப்படும்: பாகிஸ்தான் தீவிரவாதி அச்சுறுத்தல்

பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் ஜீ நியூஸ் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரியை அழைத்த பயங்கரவாதி, தொகுப்பாளர்களை சுட்டுப் பொசுக்குவதாக அச்சுறுத்தியதுடன், ஜீ நியூஸின் ஒவ்வொரு வலைத்தளத்தையும் குறிவைத்து வெடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தினான்.

ZEE NEWS குண்டு வைத்து தகர்ப்படும்:  பாகிஸ்தான் தீவிரவாதி அச்சுறுத்தல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து ZEE NEWS க்கு மீண்டும் அச்சுறுத்தல் அழைப்பு வந்துள்ளது. ZEE NEWS சேனலின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரியை தொலைபேசியில் அழைத்த பயங்கரவாதி இரவு 12 மணிக்கு ஜீ நியூஸ் மீது பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்தினான். இந்த அச்சுறுத்தும் அழைப்பு இங்கிலாந்து எண்ணிலிருந்து வந்தது. ஜீ நியூஸ் செயற்கைக்கோளிலிருந்து வெளியேற்றப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. ZEE NEWS சேனலின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரிக்கு அச்சுறுத்தல் விடுத்த அந்த தொலைபேசிக் குரல், தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களையும்  சுட்டுப் பொசுக்குவதாக மிரட்டல் விடுத்தான்.

ஜீ நியூஸின் ஒவ்வொரு வலைத்தளத்தையும் குறிவைத்து வெடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தினான். இரவு 12 மணிக்குப் பிறகு ஜீ நியூஸ் மீது பெரிய தாக்குதலை நட்த்தப்போவதாக சொன்ன அந்த தீவிரவாதி, இரவு 12 மணி வரை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் மிரட்டல் விடுத்தான்.  இதற்கு முன்பும் பலமுறை ஜீ நியூஸ் சேனலுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

ஆனால், எந்தவித அச்சுறுத்தலையும் புறந்தள்ளி, தனது மக்கள் பணியில் ஜீ நியூஸ் குழுமம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்தி | LAC முதல் LOC வரை அதிரடி நடவடிக்கைக்கு  ராணுவம் தயார்மோதிப் பார்க்கலாமாஅறைகூவல் விடும் இந்தியா   

Read More