Home> India
Advertisement

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு மிரட்டல்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு மிரட்டல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது.

பாகிஸ்தானின் பைசாலாபாத்தில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறியதாவது:-  “உண்மையான 'சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' என்ன என்பதை உங்களுக்கு சொல்வோம். நீங்கள் தக்க பதிலடியை விரைவில் எதிர்க்கொள்வீர்கள். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி 'சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள் என்று இந்திய மீடியாக்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக ஜி நியுஸ் சேனலுக்கு தக்க பதிலடி தருவோம். அமெரிக்காவால் கூட உங்களை காப்பாற்ற முடியாது. இப்போது பாகிஸ்தான் முறை, இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றான்.

Read More