Home> India
Advertisement

காருக்குள் இளம்பெண் சுட்டுக்கொலை

டெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

காருக்குள் இளம்பெண் சுட்டுக்கொலை

புதுடெல்லி: டெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

நேற்று இரவு நஜப்கார் பகுதியில் ஒரு இளம் பெண்ணின் நண்பர்கள் காருக்குள் இருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

பின்னர் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில்  கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு மாலை 7.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அந்த இளம் பெண் நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் விருந்துக்கு சென்றார். பின்னர் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில்  கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு மாலை 7.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

வீட்டின் அருகே மகளை எதிர்பார்த்து தாய் காத்திருந்தார். அப்போது வீட்டின் முன் மகளின் கார் வந்து நின்றது. காரில் இருந்து நண்பர்களில் ஒருவர் கீழே இறங்கினார். 

அப்போது திடீர்என்று காருக்குள் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே தாய் சென்று பார்த்த போது இளம்பெண் காருக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த இரு நண்பர்களில் ஒருவர் வேகமாக அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

உடனே இளம்பெண்ணை தாயும் மற்றொரு நண்பரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இளம் பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இளம் பெண்ணை சுட பயன் படுத்திய துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினார்கள். தப்பி ஓடிய நண்பரை போலீசார் தேடுகிறார்கள்.

Read More