Home> India
Advertisement

ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய 8ம் வகுப்பு மாணவர்!

டெல்லி அரசுப் பள்ளியில் படித்து வரும் 14 வயது மாணவர், தன்னை திட்டிய வகுப்பு ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளான். 

ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய 8ம் வகுப்பு மாணவர்!

டெல்லி அரசுப் பள்ளியில் படித்து வரும் 14 வயது மாணவர், தன்னை திட்டிய வகுப்பு ஆசிரியரை இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளான். 

டெல்லி சாகேத் பகுதியில் வீர் சந்தர் சிங் கர்வாலி அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வரும் மாணவர் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு வந்துள்ளான்.

எட்டாம் வகுப்புப் படித்து வரும் அந்த மாணவனை புத்தகம் கொண்டுவராதது மற்றும் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருப்பதை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும் மாணவனின் பையை ஆசிரியர் சோதனையிட்டதில் புத்தகம் ஏதும்இல்லாமல், இரும்பு கம்பி மட்டும் இருந்துள்ளது. 

இந்நிலையில் மேஜை மேல் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மீண்டும் தனது பைக்குள்வைத்துள்ளான். இதனை கவனித்த ஆசிரியர் அதனை வெளியே எடுக்க முயற்சித்தார். அப்போது , அந்த மாணவன் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அங்கிருந்துதப்பி சென்றுள்ளார். ரத்த காயங்களோடு ஆசிரியர் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read More