Home> India
Advertisement

காஷ்மீர் மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புங்கள் -மோடி

டெல்லி தேர்தலுக்கு முன்னதாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிராமங்களில் உள்ள மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புமாறு வலியுறுத்தியுள்ளார்!

காஷ்மீர் மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புங்கள் -மோடி

டெல்லி தேர்தலுக்கு முன்னதாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிராமங்களில் உள்ள மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புமாறு வலியுறுத்தியுள்ளார்!

அரசாங்கத்தின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் குழு சனிக்கிழமை முதல் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தரவுள்ளனர். அவர்களின் ஜம்மு காஷ்மீர் வருகைக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் கிராமங்களிலும் மக்களிடையே வளர்ச்சி செய்தியை பரப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

வட்டாரங்களின்படி, வெள்ளிக்கிழமை மாலை தேசிய தலைநகரில் தனது அமைச்சர்கள் குழுவின் முக்கியமான கூட்டத்தின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி பிரதமர் அவர்களிடம் கேட்டதாகவும், இது அவர்களுக்கு அடிமட்ட மட்டத்தில் பயனளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அபிவிருத்திப் பணிகளைப் பற்றி தெரிவிக்கும்படியும், அமைச்சர்கள் தங்களை நகர்ப்புறங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் கிராமங்களில் உள்ள மக்களைச் சந்திக்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தைச் சேர்ந்த 36 மத்திய அமைச்சர்கள் குழு சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்யும், இது இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்த பின்னர், அதாவது மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரித்த பின்னர் நிகழ்ந்த முதல் நிகழ்வு ஆகும்.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் (MoS) ஆகிய இருவரையும் உள்ளடக்கிய இந்த குழு, தற்போதைய நிலைமையை அளவிடுவதற்கு ஜம்மு காஷ்மீர் மக்களுடன் நேரடியாக உரையாற்றும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்களின் தூதுக்குழுவில் ஸ்மிருதி இரானி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்), டாக்டர் ஜிதேந்திர சிங் (வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான MoS), அனுராக் சிங் தாக்கூர் (நிதித்துறை MoS), ரவிசங்கர் பிரசாத் (மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர், தகவல்தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), ஜெனரல் வி.கே.சிங் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான MoS), கிரேன் ரிஜிஜு (இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான MoS), ஹர்தீப் சிங் பூரி (சிவில் விமானப் போக்குவரத்துக்கான MoS), ரமேஷ் போகிரியால் (மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ) மற்றும் பலர் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More