Home> India
Advertisement

சோலாப்பூர் கொடூரம்: சக மாணவர்களால் கொல்லப்பட்ட 10 வகுப்பு மாணவர்!

மகாராஸ்டிர மாநிலம் சோலாபூரின் பள்ளி ஒன்றில் பயிலும் 10 வகுப்பு மாணவர் தன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சோலாப்பூர் கொடூரம்: சக மாணவர்களால் கொல்லப்பட்ட 10 வகுப்பு மாணவர்!

மகாராஸ்டிர மாநிலம் சோலாபூரின் பள்ளி ஒன்றில் பயிலும் 10 வகுப்பு மாணவர் தன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

புதன்கிழமை அன்று நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பலியானவரின் பெயர் கர்ண்டே(16) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக டியோ எனும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் குற்றம்சாட்டபட்ட டியோ, பலியான மாணவர் கர்ண்டேவினை சக வகுப்பு தோழி ஒருவரிடம் பேசக்கூடாது என எச்சரித்ததாகவும், பின்னர் வாக்குவாதம் முற்றி பிரச்சனையாக உறுவெடுத்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட டியோ சில தினங்களுக்கு முன்பு தன் நண்பருடன் சேர்ந்து மற்றொரு நபரினை தாக்கியதாகவும், இந்த குற்றச்சாட்டும் இவர் மீடு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியான கரண்டே-வினை டியோ, பள்ளியின் கணினி அறையின் முன் வைத்து அடித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாட்டேபுட் காவல்துறை அதிகாரி ராஜ்குமார் புஜ்பால் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சம்பவத்திற்கு பின்னர் பள்ளியில் தென்படவில்லை, பள்ளியில் நடைப்பெற்ற செய்முறை தேர்விற்கும் அவர்கள் வரவில்லை, எனினும் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர், என தெரிவித்துள்ளார்!

Read More