Home> India
Advertisement

வரதட்சணைக் கொடுமையால் பெண்ணை பட்டினி போட்டு கொன்ற கொடூரம்!

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் பட்டினி போட்டு பெண்ணைக் கொன்றதாக காவல்நிலையத்தில் புகார்....

வரதட்சணைக் கொடுமையால் பெண்ணை பட்டினி போட்டு கொன்ற கொடூரம்!

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் பட்டினி போட்டு பெண்ணைக் கொன்றதாக காவல்நிலையத்தில் புகார்....

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் பட்டினி போட்டு பெண்ணைக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொல்லத்தில் உள்ள சந்து லால் மற்றும் துஷாரா இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டும் கொடுக்காததால் துஷாராவுக்கு உணவே வழங்காமல் பட்டினி போட்டு சந்துலாலும் அவரது தாயார் கீதாலாலும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டுக்குள் யாரும் வராதபடி தடுத்தத்தோடு அவ்வப்போது அங்கு மாந்தீரிகர்கள் மட்டும் வந்து சென்றதாகவும், புகாரளித்தார் தங்கள் மீது குட்டிச்சாத்தானை ஏவி விடுவோம் என மிரட்டியதாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், அப்பெண்ணுக்கு பச்சையாக அரிசியும், சர்க்கரையும் மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. 60 கிலோ எடையில் இருந்த துஷாரா இறந்தது தெரியாமல், மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டபோது வெறும் 20 கிலோ எடையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. கணவனும்-மாமியாரும் கைது செய்யப்பட்டு குழந்தைகள் துஷாராவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Read More