Home> India
Advertisement

எல்லையில் சீல் வைக்க? 4 முதல்வர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை

எல்லையில் சீல் வைக்க? 4 முதல்வர்களுடன் ராஜ்நாத் ஆலோசனை

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைத்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்து பேசிய பிறகு, பாதுகாப்பு படையினரையும் அழைத்து எல்லையோர பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். யூரி தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடர்ந்து எல்லையோர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை எப்படி தடுப்பது மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்க இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத் அழைப்பு விடுத்திருந்தார்.

பாகிஸ்தானுடன் பஞ்சாப் 553 கி.மீ., ராஜஸ்தான் 1037 கி.மீ., குஜராத் 508 கி.மீ., காஷ்மீர்  1225 கி.மீ. தொலைவுக்கு  எல்லையை கொண்டுள்ளது. ராஜ்நாத்சிங் நடத்தும் ஆலோசனை மூலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லை முழுமையாக ராணுவத்தின் நேரடி கண்காணிப்புக்கு கொண்டு வரவதைக் குறித்து  முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்து வருகிறார்

கடந்த மாதம் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாதிகள் 7 முகாம்களை அதிரடி தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More