Home> India
Advertisement

டெல்லி விமான நிலையத்தில் RDX அடங்கிய மர்ம பை கண்டெடுப்பு...

புதுடெல்லி சர்வதேச விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் RDX அடங்கிய ஒரு மர்ம பை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் RDX அடங்கிய மர்ம பை கண்டெடுப்பு...

புதுடெல்லி சர்வதேச விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் RDX அடங்கிய ஒரு மர்ம பை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில், டெர்மினல் -3 இன் வருகை பகுதியில், கருப்பு தூண் டிராலி பையை CISF கான்ஸ்டபிள், வி.கே. சிங், தூண் நான்கு அருகே கவனித்தார், அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக அவர் தனது பொறுப்பாளருக்கும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இந்த விஷயத்தைத் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அதிகாரிகள் பைக்குள் RDX-ன் நேர்மறையான சமிக்ஞை இருப்பதை கண்டறிந்தனர். சோதனை நாய் உதவியுடன் பையை சோதித்ததில், இது வெடிக்கும் சாதகமான சமிக்ஞையை அளித்தது. உடனடியாக, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை (BDDS) வரவழைக்கப்பட்டு, அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. வாகனங்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டம் நிறுத்தப்பட்டது.

BDDS படை வருகைக்கு பின்னர் நிலையான இயக்க நடைமுறை (SOP)-படி செயல்படுத்தப்பட்டது. பையின் எக்ஸ்ரே படங்கள் குழுவினரால் எடுக்கப்பட்டது, அவை சந்தேகத்திற்குரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சந்தேகத்திற்கு இடம் அளித்த மர்ம பை அதிகாலை 2.55 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குளிரூட்டும் குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு, CISF நிறுவனத்தால் முழுமையான தேடலும் வருகையும் பரவியது. தேடல் முடிந்ததும், அதிகாலை 3.30 மணிக்கு பயணிகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது.

முன்னதாக, பயணிகளுக்கு நிலைமை குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டு விமான நிலையில்த்தில் பயணிகளின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டதாக நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More