Home> Lifestyle
Advertisement

இனி குழந்தைகளுக்கு மோடியின் 'எக்ஸாம் வாரியர்ஸ்' புக்!

ரயில்வே மற்றும் நிலக்கரி துறையைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்'!

இனி குழந்தைகளுக்கு மோடியின் 'எக்ஸாம் வாரியர்ஸ்' புக்!

தேர்வை பற்றிய அச்சம் போகவும் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தை அத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வழங்கி உள்ளார்.

அது மட்டுமின்றி ரயில்வே மற்றும் நிலக்கரி துறையைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இந்த புத்தகத்தை வழங்கியுள்ளனர். இப்புத்தகத்துடன் அமைச்சர் பியுஷ் கோயல் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். 

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது...! 

சமீபகாலமாக தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகத்தில் மாணவர்கள் எவ்வாறு தேர்வை கையாள வேண்டும். எப்படி எளிதாக மதிப்பெண் பெறலாம் என்பது குறித்து, தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு பெற்றோரும் உதவ முடியும். இந்த புத்தகம் தேர்வுக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் முன்னேறவும் பயன்படும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்து விளங்க என் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More