Home> India
Advertisement

ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலட் நியமிக்க முடிவு

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், அந்த பதவி தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் வழங்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலட் நியமிக்க முடிவு

ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தால், அந்த பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 

பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக்கூறப்படும் அமேதி தொகுதியிலும், முதல் முறையாக தென்னிந்தியாவின் கேராள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் மக்களவை தேர்தலில் அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அந்த பொறுப்பில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக வந்த தகவல்கள் உண்மை இல்லை காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்தநிலையில், ஒருவேளை காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், அந்த பதவி தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் வழங்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. நமக்கு கிடைத்த தகவலின் படி, அடுத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலட் நியமிக்கப்படுவார் என்றும், இந்த விவகாரம் குறித்து கட்சியின் செயற்குழுவில் பேசப்பட்டதாகவும், இதுக்குறித்து அசோக் கெலட்டிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடமும் விவாதிக்கப்பட்டு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசின் அடுத்த தேசியத் தலைவர் அசோக் கெஹ்லோட் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸ் தலைவர் பதவியை அசோக் கெலட்டுக்கு அளிக்கும் பட்சத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரின் பொறுப்பில் அவர் வாசிப்பாரா? என்பதில் ஒரு பெரிய கேள்வி இருக்கிறது. அனல் அசோக் கெஹ்லோட் தொடர்ந்து முதல்வராக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Read More