Home> India
Advertisement

நடுவானில் விமானத்தில் புகைத்தே தீருவேன் என அடம்பிடித்த பயணி...

டெல்லியில் இருந்து புறப்படவிருந்த விஸ்டாரா விமானத்திற்குள், சிகரெட் புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த பயணி இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடுவானில் விமானத்தில் புகைத்தே தீருவேன் என அடம்பிடித்த பயணி...

டெல்லியில் இருந்து புறப்படவிருந்த விஸ்டாரா விமானத்திற்குள், சிகரெட் புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த பயணி இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் இருந்து கொல்கத்தா புறப்படுவதற்காக விஸ்டாரா UK707 என்ற பயணிகள் விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றுள்ளார். அப்போது உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் அந்த பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் சிகரெட் புகைத்தே தீர வேண்டும் என்று ஊழியர்களுடன் அந்தப் பயணி வாக்குவாதம் செய்துள்ளார். 

இதை அடுத்து அந்தப் பயணி இறக்கி விடப்பட்டார். பிரச்சனை காரணமாக 3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இது குறித்து விஸ்டாரா விமான நிறுவனம் தன்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில்; "எங்கள் விமானம் இங்கிலாந்தில் 946 செயல்படும் டெல்லியில் அமிர்தசார் ஒரு வாடிக்கையாளர் தனிப்பட்ட முறையில் அவசரநிலை காரணமாக டெல்லியில் உற்சாகத்துடன் பின்வாங்குவதாகச் சொன்னார், இதன் விளைவாக விமானம் வளைகுடாவிற்கு திரும்ப வேண்டும் மற்றும் அவசர அவசரமாக பாதுகாப்புத் திறனைக் கொண்டது, அதன்பிறகு அதே விமானம் UK707 அம்ரித்ஸர் - தில்லி - கொல்கத்தாவில் இயக்கப்பட்டது.

"டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு இடைப்பட்ட இடைவெளியில் இறக்கப்பட வேண்டும் என்ற நிலையில், நாங்கள் குழம்பிப் போயுள்ளோம். தான் புகைப்பிடித்தே தீர வேண்டும் என ஒரு கட்டுக்கடங்கா வாடிக்கையாளர் நிலை இருந்தது. அவர் கேபினரினால் ஒரு எச்சரிக்கை கடிதத்தை வழங்கினார், பின்னர் விமான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க மறுத்துவிட்டார். Vistara தாமதத்தை வருந்துகிறது, எனினும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு Vistara முதன்மையான முன்னுரிமை மற்றும் அது எந்த வகையான ஒழுக்கமான நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என அதில் குறிப்பிட்டுள்ளது. 

 

Read More