Home> India
Advertisement

பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயன்ற ஒருவன் சுட்டுக்கொலை

பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயன்ற ஒருவன் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குர்தாஸ்பூர் சரகம், பஹாரிப்பூர் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி உள்ளது. இங்குள்ள கண்காணிப்பு முகாமில் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று பின்னிரவு வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டபடி, திரும்பிப் போகுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறி வந்த அந்த மர்ம நபரை இன்று காலை 6 மணியளவில் நமது வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.

Read More