Home> India
Advertisement

பாக்., தாக்குதலில் மரணமடைந்த இராணுவ வீரர் சுரேஷ்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் வீரமரணம் அடைந்த பி.எஸ்.எப்.,வீரர், தமிழகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.  

பாக்., தாக்குதலில் மரணமடைந்த இராணுவ வீரர் சுரேஷ்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர். 

இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78-வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்ததில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்துள்ளது. கடந்த 1976-ல் பிறந்த அவர், 1995-ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.

 

Read More