Home> India
Advertisement

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாக்., விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம்: BJP தலைவர்!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் அல்லது சீனா விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் ஷர்தா தெரிவித்துள்ளார்!!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாக்., விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம்: BJP தலைவர்!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் அல்லது சீனா விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் ஷர்தா தெரிவித்துள்ளார்!!

தேசிய தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடுமையான காற்று மாசால் பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவு மாசுபடுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும், இரு அண்டை நாடுகளில் ஒன்று இந்தியாவுக்கு விஷ வாயுக்களை விடுவித்திருக்கலாம் என்றும் பாஜக தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்தவொரு போரிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய முடியாததால் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் ஷர்தா கூறினார். இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதால் தான் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கூறும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் கிருஷ்ணாவாக பிரதமர் மோடியும், அர்ஜுனனாக அமித் ஷாவும் தீர்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். "இது கிருஷ்ணா மற்றும் அர்ஜுனனின் காலம். கிருஷ்ணாவாக மோடியும், அர்ஜுனனாக அமித் ஷாவும் ஒன்றாக அதை கவனித்துக்கொள்வார்கள்" என்று அவர் கூறினார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா மற்றும் பஞ்சாபில் குண்டுவெடிப்பை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆபத்தான மாசுபாட்டுக்கு காரணம் என்று பாஜக தலைவர் விமர்சித்தார்.  

 

Read More