Home> India
Advertisement

அயோத்தியில் ராமபிரான் கோயில் கட்டப்படுவதை தடுக்க முடியாது :மோகன் பகவத்

விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமபிரான் கோயில் கட்டப்படுவதை தடுக்க முடியாது :மோகன் பகவத்

விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பதாஞ்சலி சார்பாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் ராமபிரான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விசியத்தில் அரசியல் கட்சிகள் வரம்புக்கு உட்பட்டு தான் செயல்பட முடியும். ஆனால் எங்களுக்கு அப்படி எந்தவித வரம்பும் கிடையாது.

இதனால் விரைவில் தகுத்த நேரத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். அதை யாரும் தடுக்கமுடியாது. ஏன் எதிர்க்கட்சிகளால் கூட வெளிப்படையாக தடுக்க முடியாது எனவும் கூறினார்.

Read More