Home> India
Advertisement

எங்கள் குடும்பத்துக்குள் பிரச்சினை இல்லை -அகிலேஷ்

எங்கள் குடும்பத்துக்குள் பிரச்சினை இல்லை -அகிலேஷ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் அமைச்சராக உள்ளார்.  

அகிலேசுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவ்வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்வரின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால் அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்தார். 

இந்த நிலையில் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கினார். அதோடு கட்சித் தலைவராக தனது சகோதரர் சிவ்பால் யாதவ்வை நியமனம் செய்து அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்துக்குள் சிவ்பால்லிடம் இருந்த பொதுப்பணித் துறை, நீர்ப் பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய பதவிகளை அகிலேஷ் பறித்தார். அதற்கு பதில் சமூக நலத்துறையை கொடுத்துள்ளார். அகிலேசின் இந்த அதிரடி நடவடிக்கை முலாயம்சிங், சிவ்பால் இருவருக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக சிவ்பாலுக்கு ஆதரவாக இருந்த உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை செயலாளர் தீபக் சிங்காலையும் அகிலேஷ் நீக்கினார். 

இந்நிலையில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் யாதவுக்கும் உடனடியாக டில்லி வருமாறு சம்மன் அனுப்பினார். இதனை ஏற்று சிவ்பால் டில்லி சென்றுள்ளார். ஆனால் தனது தந்தை சம்மனை அகிலேஷ் புறக்கணித்துள்ளார். 

இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி அகிலேஷ் கூறியதாவது:- அரசுக்குள் சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், எங்கள் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். நான் ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் முலாயம் சிங் யாதவ் அவர்களை கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிப்பேன். சிலசமயங்களில் சுய அறிவை பயன்படுத்த வேண்டியுள்ளதால் சுயமாக சில முடிவுகளை எடுத்தது உண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை பொருத்தவரை தலைவர் முலாயம் சிங் யாதவ் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று தெரிவித்தார். 

இதேபோல பேட்டி அளித்த சிவபால் யாதவ், நான் முலாயம் சிங்கிடம் பேசவுள்ளேன். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஒத்துழைத்து செயல்படுவேன் என கூறினார்

Read More