Home> India
Advertisement

AirAsia விமானத்தில் பச்சிளம் குழந்தை சடலம், தொடரும் மர்மம்!

AirAsia விமானத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் சடலாமக மீட்கப்பட்டுள்ளது!

AirAsia விமானத்தில் பச்சிளம் குழந்தை சடலம், தொடரும் மர்மம்!

AirAsia விமானத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் சடலாமக மீட்கப்பட்டுள்ளது!

டெல்லியில் இருந்து இம்பால் சென்ற Air Asia விமானத்தின் கழிவறையில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை.

மீட்கப்பட்ட குழந்தையின் வாயில் டிஸு காகிதம் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் தாய் இம்பால் விமான நிலையத்தில் இருந்து அதே விமானத்தில் பயணித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை சம்பவத்தின் போது குழந்தையின் சத்தம் வெளியே வராமல் இருக்க குழந்தையின் வாயில் காகித்தத்தை வைத்து அடைத்திருப்பதாக தெரிகிறது. கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் விமான காவல்துறை கண்கானிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையின் நிலை குறித்து மருத்துவ குழுவிற்கு உடனடி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விவரம் அறிந்து வந்த மருத்துவர் குழு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் பெயர் பட்டியலைக் கொண்டு குழந்தையின் தாய் தகவல் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தையின் தாய் யார்., குழந்தையின் மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிவோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Read More