Home> India
Advertisement

பாலியல் புகாரில் கடற்படை அதிகாரி கேரளாவில் கைது....

எட்டு முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற கடற்படை அதிகாரி பாலியல் புகாரில் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்... 

பாலியல் புகாரில் கடற்படை அதிகாரி கேரளாவில் கைது....

எட்டு முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற கடற்படை அதிகாரி பாலியல் புகாரில் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்... 

கேரளா மாநிலம் கோட்டயத்தில் பெண் கற்பழிப்பு தொடர்பாக 38 வயதுடைய கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை கடற்படை அதிகாரி முரளி குமார் தனது மகளை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண்ணின் தாய் காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். 

இந்த குற்றசாட்டு குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை மும்பை கடற்படை அதிகாரி முரளி குமாரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இவர் மீது SC / ST அட்டூழியங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இவர் மீது புகார் கொடுத்துள்ளன நிலையில், கடந்த சனிக்கிழமை கடற்படை அதிகாரி முரளி குமாரை காவல்துறையினர் ஹோட்டலில் வைத்து கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து காவல்துரியினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். 

மும்பை கடற்படை அதிகாரி முரளி குமார், இரண்டு முறை மிஸ்டர் ஆசியா தலைப்பும், எட்டு முறை மிஸ்டர் இந்தியா பட்டமும் வென்றுள்ளார். இவர் சமூக ஊடகம் மூலம் பெண்களுடம் நட்பு கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

Read More