Home> India
Advertisement

NCRB Report 2017: குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உ.பி. நம்பர் 1

இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) திங்களன்று வெளியிட்டது.

NCRB Report 2017: குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உ.பி. நம்பர் 1

புதுடெல்லி: நாடு முழுவதும் குற்றங்களை கண்காணிக்கும் (National Crime Records Bureau) தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2017 ஆம் ஆண்டுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளது. என்.சி.ஆர்.பி (NCRB)  தரவுகளின்படி, 2016 உடன் ஒப்பிடும்போது 2017-ல் நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன, அதே நேரத்தில் 2017-ல் நாட்டில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் 1,78,836 வழக்குகள் பதிவாகியுள்ளன. அது 2016 ஆம் ஆண்டில் 1,79,896 வழக்குகளாக இருந்தது. 2016 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 30,450 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2017 ஆம் ஆண்டில், 28,653 கொலை வழக்குகள் என 5.9 சதவீதம் குறைந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 88008 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து 2017 இல் 95,893 ஆக பதிவாகியுள்ளது. 

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​அதிகபட்ச கடத்தல் சம்பவம் நடைபெற் மாநிலம் எதுவென்றால், அது உத்தரபிரதேசமாகும், அங்கு 2016 ஆம் ஆண்டு 15,898 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017 ஆம் ஆண்டில் 19,921 வழக்குகளாக அதிகரித்துள்ளது, அதாவது 2017 இல் 4023 கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன, இது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த கடத்தல் வழக்குகளில் 20.8 சதவீதமாகும். 

கடத்தல் வழக்குகளில் உ.பி.க்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது, அங்கு 10324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து அசாம் பீகார் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லியில் கடத்தல் வழக்குகள் 2016 உடன் ஒப்பிடும்போது குறைந்துவிட்டன. 2016 ஆம் ஆண்டில், டெல்லியில் 6619 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017 இல் 6095 ஆகக் குறைந்துள்ளது.

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 28 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2016 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது 1,06,958 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை 2017-ல் 1,29,032 ஆக அதிகரித்துள்ளன. குழந்தைகளுடனான குற்றங்களில் உ.பி. முதலிடத்தில் உள்ளது, அங்கு 2016 ஐ விட 19 சதவீதம் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சைபர் கிரைமில் கூட, உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் சைபர் கிரைம் வழக்குகள் 2639 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டில் உ.பி.யில் 4971 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 3604 சைபர் கிரைம் வழக்குகளை பதிவாகி உள்ளது. கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளைக குறித்து என்.சி.ஆர்.பி தகவலின் படி, 2017 இல் 257 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் 138 வழக்குகளில் முதலிடத்தில் உள்ளது. 32 வழக்குகளுடன் உ.பி. இரண்டாவது இடத்தில் உள்ளது. 18 வழக்குகளில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

2017 ஆம் ஆண்டில் ரூ.117 கோடிக்கு மேல் மதிப்புள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் திருடப்பட்டதாக என்.சி.ஆர்.பி.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 30,62,579 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2016-ல் 29,75,711 ஆக இருந்தது. அதாவது, 2016 உடன் ஒப்பிடும்போது 2017 இல் 86,868 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, நம் நாட்டில், கொலை, கற்பழிப்பு, கடத்தல், போராட்டம் போன்றவற்றுக்கான தண்டனை விகிதம் 45 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 

இந்தியாவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 43.1 சதவீதம் பேர் மட்டுமே 2017-ல் கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். கற்பழிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனை விகிதம் 32.2 சதவீதமாகும். கடத்தல் வழக்குகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம், 2017 ல் நடந்த மொத்த கடத்தல் வழக்குகளில் 26.6 சதவீதம் பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Read More