Home> India
Advertisement

பிரபல தாதா உபி-ன் பாக்பட் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!

உத்தரபிரதேச மாநில பாக்பட் சிறைச்சாலையில் வைத்து பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சக கைதியால் சுட்டுக் கொலை செய்யபட்டார்.

பிரபல தாதா உபி-ன் பாக்பட் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!

உத்தரபிரதேச மாநில பாக்பட் சிறைச்சாலையில் வைத்து பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சக கைதியால் சுட்டுக் கொலை செய்யபட்டார்.

சில நாட்களுக்கு முன் பஜ்ரங்கியின் மனைவி சீமா சிங்  தனது கணவர் போலி என்கவுண்டரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டபடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் குற்றம்சாட்டிய சில நாட்களில் இந்த கொலை நடைபெற்று உள்ளது.

பிரேம் பிரகாஷ் சிங் என்ற முன்னா பஜ்ரங்கியை  ஒரு மிரட்டல் வழக்குக்காக பாக்பட்டில் இருந்து  ஜான்சிக்கு மாற்றப்பட இருந்தார். இன்று காலை 5.30 மணி அளவில் அவருக்கு டீ கொடுக்கும் போது அவர் சக கைதியால் சுட்டுக்கொல்லபட்டு உள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச முதலமைச்சர்  உத்தரவிட்டு உள்ளார்.

Read More