Home> India
Advertisement

14 வயது காதலனுடன் ஓடிய 6 குழந்தைகளின் தாய்!

6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 14 வயது பையனை காதலித்து பெற்ற பிள்ளைகள் மற்றும் கணவனை விட்டுவிட்டு அந்த சிறுவனுடன் ஓடி போய் தலைமறைவாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

14 வயது காதலனுடன் ஓடிய 6 குழந்தைகளின் தாய்!

குஜராத் : 6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், 14 வயது பையனை காதலித்து பெற்ற பிள்ளைகள் மற்றும் கணவனை விட்டுவிட்டு அந்த சிறுவனுடன் ஓடி போய் தலைமறைவாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் அழகு, ஜாதி, மதம், பணம் போன்றவற்றை பார்க்காது, காதல் கண்ணை மறைக்கும் என்பதெல்லாம் சரிதான், அதற்காக கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் கூடவா துறக்கும் அளவிற்கு காதல் இருக்கும்.  இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் பலரும் முறைதவறிய உறவில் ஈடுபடுவது போன்ற அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

ALSO READ பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது?

குஜராத் மாநிலதிலுள்ள தாஹோத் என்கிற மாவட்டத்தின் பஃதேபுரா தாலுகாவில் அமைந்துள்ள சக்ரபதா என்னும் கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவர் மற்றும் 6 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.  இந்த பெண் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார், இவருடன் அம்லிகேதா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனும் வேலை பார்த்து வருகிறான்.

இந்த 40 வயது பெண்ணுக்கும், 14 வயது சிறுவனுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.  இந்த தீவிர காதலை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர்.  அதனை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர்.  இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி 1 மாதம் கழித்த பின்னர் சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அப்போது தனது மகன் 2007-ல் பிறந்ததாகவும், அவனுக்கு 14 வயது தான் ஆகிறது, அவன் மைனர் என்றும், அவனை அந்த பெண் கடத்தி கொண்டு போய்விட்டதாகவும் கூறினர், மேலும் ஆதார் அட்டையில் குறிப்பிட்டிருந்த வயதையும் ஆதாரமாக காண்பித்தனர்.   அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தொலைபேசி உரையாடலில் அந்த சிறுவன் தான் 1997-ல் பிறந்ததாகவும் சட்டப்படியான வயது தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளான்.  இதனால் குழப்பமடைந்த போலீசார் அந்த சிறுவனின் பெற்றோரிடம் அவர்கள் மகனின் சரியான பிறப்பு சான்றிதழை கொண்டு வந்து காண்பிக்கும்படி கூறினர்.  மேலும் அதில் இருக்கும் வருடத்தின்படி அந்த சிறுவன் மைனர் என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.

ALSO READ ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More