Home> India
Advertisement

ICU-வில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்த சிறுமியை கற்பழித்த காமுகர்கள்....

உ.பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த கொடூரம்.... 

ICU-வில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்த சிறுமியை கற்பழித்த காமுகர்கள்....

உ.பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த கொடூரம்.... 

உத்தர பிரதேச மாநிலம் பரேலி நகரில் தனியார் மருத்துவமனை ICU வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருந்த சிறுமியை மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர், உடல்நிலை சரியில்லாத சிறுமியை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், டீன் ஏஜ் சிறுமி தனியாக இருந்த ஐ.சி.யூ. பிரிவில் மருத்துவமனை சீருடை அணிந்தபடி ஊழியர் மற்றும் கூட்டாளிகள் 4  பேர் உள்ளே நுழைந்தனர்.  சிறுமிக்கு கட்டாயப்படுத்தி ஊசி போட முயன்றுள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை வாயை பொத்தி, கைகளை கட்டி போட்டனர்.

அதன்பின் கும்பலாக அந்த சிறுமியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  இதுபற்றி பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் தனது பாட்டியிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.  அவர் மருத்துவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.  அதன்பின் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில் மருத்துவமனை ஊழியர் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

 

Read More