Home> India
Advertisement

பாவனா, அமலாபால் வரிசையில் அடுத்து இவருக்கும் அதே பிரச்சனை!

பிரபல மலையாள நடிகை சானுஷா சந்தோஷ்-வை பலவந்தப்படுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை திரிசூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

பாவனா, அமலாபால் வரிசையில் அடுத்து இவருக்கும் அதே பிரச்சனை!

பிரபல மலையாள நடிகை சானுஷா சந்தோஷ்-வை பலவந்தப்படுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை திரிசூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

இன்று காலை மங்களூரு-திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சானுஷா பயணித்த போது அவரை பலவந்தப் படுத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஆன்டோ போஸ் என்பவரின் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அவல் திருசூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் கண்கானிப்பில் எடுக்கப்பட்டுள்ளார்!

fallbacks

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சானுஷா தெரிவிக்கையில், "தான் மங்களூரு-திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸின் A/C கோச்சில் மேல் பர்த்தில் பயணித்ததாகவும, இவரு தூங்கும் போது தனது உதட்டில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்து விழித்தெழுந்ததாகவும், அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஆன்டோ போஸ் தனது உதடை வருடிக்கொண்டிருந்ததாகவும்" அவர் தெரிவித்தார்.

பின்னர் உடனே இதர பயணிகளின் உதவியை நாடி அவரை காவல்துறையில் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சானுஷா,. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

Read More