Home> India
Advertisement

கத்வா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!

கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!

கத்வா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!

கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.


கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் சிறுமியை 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதில்,  இதில் காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா மற்றும் பர்வத குமார் மற்றும் கோவிலின் பிரதான பூசாரி சாஞ்சி ராம் ஆகியோர் அடங்குவர். இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் 2 அமைச்சர்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் பஞ்சாப் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், சிறுமி கொலை வழக்கில் சஞ்சய் ராம், விஷால், தீபக், சுரேந்தர் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மேலே கூறப்பட்ட மூன்று குற்றவாளிகளும், ஆனந்த தத்தா, திலக் ராஜ் மற்றும் சுரிந்தர் ஆகியோர் ரன்பீர் குற்றவியல் கோர்ட்டின் கீழ் தண்டனை பெற்றனர். கடத்தல்காரர்கள், கற்பழிப்பு மற்றும் பலர் மத்தியில் சாட்சியங்கள் அழிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஆறு பிரிவுகளின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

Read More