Home> India
Advertisement

#MeToo விவகாரத்தில் சிக்கிய "Action King" அர்ஜூன்!

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்!

#MeToo விவகாரத்தில் சிக்கிய

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்!

கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் இந்தியாவில் முதன்முறையாக பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா துவங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த ஒருமாத காலமாக இந்த விவகாரம் உலுக்கி வருகின்றது. 

தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டினை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாக கவிஞர் தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கனேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது #MeToo பாய்ந்துள்ளது. கன்னட உலகின் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் இவர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

Read More