Home> India
Advertisement

காஷ்மீர் புல்வாமா: பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீர் புல்வாமா: பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரின் குல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 4 முதல் 5 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். 

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், இரண்டு பெருமளவு ஆயுதந்தாங்கிய பயங்கரவாதிகள் இந்த வீட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது எனவே இந்த தேடுதல் வேட்டையில் 130 சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளன எனக்கூறினார்.

Read More