Home> India
Advertisement

ஈஷா அறக்கட்டளை சார்பில் CRPF வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை சார்பில் CRPF வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த CRPF வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது. மேலும் ராணுவ படைப் பிரிவு வீரர்களுக்கு ஈஷா மைய நிறுவனர், ஜக்கி வாசுதேவால் சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கிறார். 

Read More