Home> India
Advertisement

இண்டிகோ விமானத்தில் ஐ.எஸ் ஆதரவு கோஷம்?

இண்டிகோ விமானத்தில் ஐ.எஸ் ஆதரவு கோஷம்?

துபாயில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷங்களை எழுப்பியதால் விமானமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் மும்பை நோக்கி சென்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோஷம் எழுப்பியவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்வந்த போலீசார் அந்த நபரை பிடித்து சென்றனர். இவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More