Home> India
Advertisement

ஒரே நாளில், 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம்!

பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது!

ஒரே நாளில், 3 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம்!

பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது!

நேற்று (ஞாயிறு) நடைப்பெற்ற இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர், துக்கி (50 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அச்சிறுமியில் அருகாமை வீட்டுகாரர் எனவும், சிறியின் வீட்டில் யாரும் இல்லாதபோது கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும் தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் குடும்பத்தாருக்கு பின்னரே தெரிவயவந்துள்ளது. அச்சிறுமியை அவரது தாயார் குளிக்கு வைக்கையில் சிறுமியின் தனிப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்களை குறித்து அவரிடம் விசாரிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட துக்கி, மரக்குச்சியால் சிதைத்தினால் ஏற்பட்ட காயம் என தெரிவத்துள்ளார்.

விஷயமறிந்து அதிர்ந்துப் போன குடும்பத்தார் இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் சிறுமி சிகிச்சைக்காக கல்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட துக்கி POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கெள்ளப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே வேலையில், பானிப்பட் பகுதியின் உர்லனா கிராமப் பகுதியில், ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பரிசோதனையில் அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

அதேப்போல் ஜின்ட் பகுதியில் அரை நிர்வான நிலையில் 15 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இவரை வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக பரிசோதனை முடிவுகள் தொரிவிக்கின்றது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More