Home> India
Advertisement

ஹைதராபாத் காவலரின் உயிரை வாங்கிய ஊடக செய்தி!

தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த 23 வயது காவலர், ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொன்டார்!

ஹைதராபாத் காவலரின் உயிரை வாங்கிய ஊடக செய்தி!

ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த 23 வயது காவலர், ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொன்டார்!

பலியானவரின் பெயர் சந்தீப் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருமணம் ஆன பெண்மனி ஒருவருடன் இவருக்கு கள்ளதொடர்பு இருந்து வந்ததாகவும், இந்த விவகாரத்தினை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியதாலும் இவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தில் இவரது உடல் சடலமாக இருப்பதினை குறித்து அக்கம்பக்கத்தினர் ரயில்வே துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து அவரது சடலத்தினை மீட்டுள்ளனர்.

விசாரணையில் இவர் சந்தீப் குமார் தான் எனவும், கடந்த ஜனவரி 29 ஆம் நாள் இவர்மீது சம்பந்தப்பட்ட பெண்மனியின் கனவர் புகார் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

சந்தீப் குமார், காவல் படையின் உறுப்பினராக கடந்த 2014 ஆம் ஆண்டு மொகலபூர காவல்நிலையத்தில் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

Read More