Home> India
Advertisement

தொடர்ந்து குளிக்காமல், ஷேவ் செய்யாத கணவருக்கு மனைவி விவாகரத்து!!

தொடர்ந்து குளிக்காமல், ஷேவ் செய்யாத கணவருக்கு மனைவி விவாகரத்து!!


திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தொடர்ந்து குளிக்காமல், ஷேவ் செய்யாமல் இருந்த கணவனை விவாகரத்து செய்யும் மனைவி!!

மத்தியபிரதேசத்தை சேர்ந்த 23 வயது பெண்மணி, தனது கணவர் குளிக்காமல் இருப்பதால் திருமணமாகி 1 வருடத்திற்குள் விவாகரத்து கோரியுள்ளார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தொடர்ந்து 7 நாட்களாகியும் குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருந்திருக்கிறார். இந்நிலையில், அவர் துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக வாசனை திரவியத்தை பயன்படுத்தி வந்ததை பார்த்த அவரது மனைவி அவரை கண்டித்துள்ளார். இந்தி சிறிதும் கூட அவரது கணவர் ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இப்படி ஒரு கணவராடு வாழ இயலாது என மனைவி கடந்த ஆண்டு விவாகரத்து கோரினார்.

இந்நிலையில், 6 மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழுமாறும், இருவருக்கும் ஆலோசனை வழக்கப்படும் என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டும், தனக்கு விவாகரத்து வேண்டும் என பெண் உறுதியாக இருக்கிறார். 

 

Read More