Home> Tamil Nadu
Advertisement

நீட் தேர்வு மையம் குறித்து CBSE பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது பற்றி சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

நீட் தேர்வு மையம் குறித்து CBSE பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது பற்றி சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு இணைந்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE நடத்த உள்ளது.

இதற்கான தேர்வு மையம் ஒதுக்கீட்டில், தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

எனவே இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி மனு அளித்திருந்தார். 

இந்த வழக்கின் விசாரணையில், தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு தேதி நெருங்குவதால் நாளையே விளக்கமளிக்க வேண்டும் என கூறி வழக்கு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More