Home> India
Advertisement

டெல்லியில் பேய் மழை! குளு குளுவென உயர்ந்தது குளிர்!!

டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

டெல்லியில் பேய் மழை! குளு குளுவென உயர்ந்தது குளிர்!!

டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

டெல்லியில் கடந்த 7 நாள்களாக காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வருகிறது. 
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடியுடன் வெளியில் செல்வதை காண முடிந்தது. தூய காற்றை சுவாசிக்க வழி செய்யும் வகையில் வாடகைக்கு காற்றை விற்கும் கடைகளும் உருவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று டெல்லியின் பலத்த கனமழை பெய்துள்ளது. தெற்கு டெல்லி, என்சிஆர், நொய்டா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இன்று அதிகாலை முதல் குளிர்ச்சி நிலவியது.

சாப்தர்ஜங்கில் உள்ள வானிலை மையத்தில் பதிவான தகவலின்படி, நேற்று இரவு 8.30 மணி வரை 1.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் தொடர் மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More