Home> India
Advertisement

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை விபரம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை விபரம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை  படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் தீர்ப்பு வழங்கினார். அதில் அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 36 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 24 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கின் தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது. தண்டனை விபரம் வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் தண்டனை அறிவிப்பை 11-ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.  ஆனால் சனிக்கிழமை அன்று நீதிமன்றம் இந்த வழக்கின் தண்டனை அறிவிப்பை வரும் திங்கக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More